வடமாநிலங்களில் உக்கிரமான போராட்டம்.. தமிழக டிரைவர்கள் உணவு, தண்ணீரின்றி குமுறல்.. என்ன நடக்கிறது?
போபால்: கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவில் உள்ள சில பிரிவுகளை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வட மாநிலங்களில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடர் பெரும் சலசலப்புகளுடன் முடிந்தது. எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம், இந்திய தண்டனைச் சட்டம் திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. அதாவது, இந்திய தண்டனை சட்டம் என்பது ஆங்கிலேயர் கால சட்டம் என்று கூறி இதனை மாற்ற மசோதா ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்தது. இது வாக்கெடுப்புக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இந்திய தண்டனை சட்டம் என்பது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' எனவும், இந்திய சாட்சிய சட்டம் 'பாரதிய சாக்சியா' எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், இதில் சில திருத்தங்களையும் அரசு மேற்கொண்டது. அதன்படி, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை, ஹிட் அண்ட் ரன் என்று சொல்லப்படும், சாலை விபத்துகளுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் திருத்தப்பட்டது.
இதுதான் தற்போது பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இந்த வழக்கில் சிக்கினால் 2 வருட சிறை தண்டனைதான் இருந்தது. எனவே இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து, மத்திய பிரதேசம் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் முக்கிய சாலைகள் முடங்கியுள்ளன. போராடும் லாரி டிரைவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்திய நிலையில், டிரைவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், மக்கள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வாகனங்கள் தவிர கேன்களிலும், பெட்ரோல், டீசல்களை நிரப்பி செல்கின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் ஊர் பெயர் தெரியாத இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த லாரி டிரைவர்கள் சிக்கி தவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன. வீடியோவில் தமிழ்நாட்டை சேர்ந்த டிரைவர்கள் பேசியிருப்பதாவது, "மத்தியப் பிரதேசத்தில் நாங்கள் நின்றுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு முன்பு 50 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன, பின்னே 50 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன.
இதை மீறி எதிர் சாலையில் ஏறி சென்றால், கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார்கள். நாங்கள் நடுக்காட்டில் சிக்கியிருக்கிறோம். இங்கு எந்த கடைகளும் கிடையாது, உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம். விபத்து ஏற்படுத்தினால் லட்சக்கணக்கில் அபராதம் கட்ட வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது. லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தால் நாங்கள் ஏன் லாரி ஓட்ட வருகிறோம்? குடும்ப கஷ்டத்தினால்தான் நாங்கள் லாரிக்கு வருகிறோம்.
லட்சக்கணக்கில் அபராதம் செலுத்துவது மட்டுமல்லாது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. 10 ஆண்டுகள் சிறை எனில், எங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள். எதிர்பாராமல் நடப்பதால்தான் அதை விபத்து என்று சொல்கிறோம். இப்படி எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?" என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications