காவிரி: பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயற்சி- பி.ஆர்.பாண்டியன் உட்பட 50 தமிழக விவசாயிகள் கைது
காவிரி மேலாண்மை வாரியத்தை 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் வீடு முற்றுகையிடப்படும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video

டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டது. வாரியம் அமைப்பதற்கு ஆறு வார கால கெடுவும் அளித்தது.

ஆனால், இதுவரை மத்திய அரசு காவிரி வாரியம் அமைப்பதற்கான எந்தப்பணியும் துவங்கவில்லை. இது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி முதல் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், தமிழக அரசு இனியும் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று பிற்பகல் மூன்று மணிக்குள் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், அதை செயல்படுத்தாவிட்டால் இன்று மாலை தமிழக விவசாயிகள் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அவர்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் வீட்டை முற்றுகையிடச்சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications