வறட்சி நிவாரண நிதியாக ரூ39, 565 கோடி வழங்க மோடிக்கு முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை!!
தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வறட்சிநிவாரணம் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு 39, 565 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தமிழக அரசுக்கு வறட்சி நிவாரண நிதியாக 39, 565 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மத்திய அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்மாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உடனடியாக நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இது தொடர்பான மனுவை பிரதமர் அலுவலகத்தில் இன்று அளித்தார்.
தமிழக அரசின் மனுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை சமாளிக்க நிவாரண நிதியாக 39,565 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய அரசு குழுவை அனுப்பி ஆய்வு செய்யவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்தும் மத்திய அரசின் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications