தமிழக பயங்கரவாதி ஜாபர் அலியை மடக்கி தூக்கிய குஜராத் போலீஸ்- ஒரே நாளில் 4 பேர் கைது!

Subscribe to Oneindia Tamil

வதோதரா: தமிழகத்தில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஜாபர் அலியை குஜராத் போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆட்களை சேர்த்ததில் ஜாபர் அலி முக்கிய பங்கு வகித்தவர். அவரை தமிழக போலீசார் தேடி வந்தனர்.

Tamilnadu Terrorist Zafar Ali arrested from Gujarat

இந்நிலையில் டெல்லியில் முகமது சையத் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குஜராத்தின் வதோதராவில் பதுங்கி இருந்த ஜாபர் அலி என்கிற பயங்கரவாதியும் சிக்கினார். இவரை தமிழக போலீசார் தேடி வந்தனர்.

வதோதராவில் கடந்த 12 நாட்களாக முகாமிட்டு ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்து வந்தார் ஜாபர் அலி என்கிறது குஜராத் போலீஸ். பெங்களூருவில் தமிழக போலீசார் நேற்று 3 பயங்கரவாதிகளை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+