Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாயார் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தெஹல்கா ஆசிரியருக்கு இடைக்கால ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க பாலியல் புகாரில் சிக்கி சிறையிலுள்ள தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இறுதி சடங்கு முடியும் வரை தேஜ்பாலை போலீஸ் காவலின் கீழ் வைத்திருக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் புகார்

பாலியல் புகார்

உடன் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின்பேரில், தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால், கடந்த ஆண்டு நவம்பர் 30ம்தேதி கோவா மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோவா சிறைச்சாலையில் நீதிமன்ற காவலின்கீழ் தேஜ்பால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

கோவா நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவர் ஜாமீன் கேட்டு போட்ட மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டன. சமூக அந்தஸ்து உள்ள தேஜ்பாலால் சாட்சியங்கள் கலைக்கப்பட கூடும் என்ற எதிர்தரப்பு வழக்கறிஞரின்வாதத்தால் தேஜ்பாலுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

தாயார் மரணம்

தாயார் மரணம்

இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தேஜ்பாலின் தாயார் சகுந்தலா, கோாவில் நேற்று மரணமடைந்தார். அவரது இறுதி சடங்களில் கலந்துகொள்ள தன்னை இடைக்கால ஜாமீனில் வெளியேவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேஜ்பால் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்தீப் கபூர் இன்று மனு தாக்கல் செய்தார். இறுதி சடங்கு சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் அதுவரைஜாமீனில் வெளியே இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

3 வார காலம் அனுமதி

3 வார காலம் அனுமதி

கோவா மாநில அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் சவுகான் மற்றும் சிக்ரி தலைமையிலான அமர்வு, தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள தேஜ்பாலுக்கு மூன்று வார காலம் அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த காலகட்டத்தில் அவர் போலீஸ் காவலின் கீழ் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாயாரை பார்த்து நலம் விசாரிக்க தேஜ்பாலுக்கு நீதிமன்றம் இதுவரை இருமுறை அனுமதி வழங்கியிருந்தது.

இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி

இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி

கோவா மாநில அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் சவுகான் மற்றும் சிக்ரி தலைமையிலான அமர்வு, தாயாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள தேஜ்பாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த காலகட்டத்தில் அவர் போலீஸ் காவலின் கீழ் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தாயாரை பார்த்து நலம் விசாரிக்க தேஜ்பாலுக்கு நீதிமன்றம் இதுவரை இருமுறை அனுமதி வழங்கியிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+