டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரி திடீர் நீக்கம்.. தொழில்துறையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சைரஸ் மிஸ்திரி திடீரென நீக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற போர்டு மீட்டிங்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2012ல் டாடா சன்ஸ் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்டவர் மிஸ்திரி. இவரது திடீர் நீக்கம், தொழில்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று போர்டு மீட்டிங்கில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில், ரத்தன் டாடா, வேணு ஸ்ரீநிவாசன், அமித் சந்த்ரா, ரோனன் சென் மற்றும் லார்ட் குமார் பட்டாச்சாரியா ஆிகயோர் இடம்பிடித்துள்ளார்கள். இன்னும் 4 மாதங்களுக்குள் புதிய தலைவரை இந்த கமிட்டி தேர்ந்தெடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications