நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது: அருண் ஜேட்லி
Recommended Video
டெல்லி: வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.3% ஆக இருக்கும். நடப்பு நிதியாண்டில், 41% கூடுதலாக வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்தார்.
6.47 கோடியாக 2014-15ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இருந்த நிலையில், தற்போது 2016-17 நிதியாண்டில் அது, 8.27 கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரம், வருமான வரி அளவு என்பது மிகப்பெரிய அளவில் மாறவில்லை என்றும் குறைந்த அளவில்தான் வரி கட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாய உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய பதிவு செய்துள்ள, ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் கொண்டுள்ள, நிறுவனங்களுக்கு முதல் 5 வருடங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு வழங்கப்படும்.