சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளோரிடம் வரி வசூல்: அருண் ஜெட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களிடமிருந்து வரி வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

லோக்சபாவில் இன்று பாஜக உறுப்பினர் அனுராக் தாகூரின் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இடைமறித்த அருண்ஜெட்லி கருப்பு பணம் குறித்த உறுப்பினரின் சந்தேகத்திற்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், "கருப்பு பணத்தை மீட்க அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு புலனாய்வு குழு சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. கருப்பு பணம் வைத்திருப்போருக்கு வரி விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. தற்போதைய மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் மறைப்பதற்கு எதுவுமே கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications