சிவசேனாவைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணியை முறிக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம்?
பாஜகவுடனான கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறுகிறது.
அமராவதி: சிவசேனாவைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணியில் இருந்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் வெளியேற உள்ளது.
அமராவதியில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஆந்திராவில் கூட்டணி தர்மத்தை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். ஆனால் மாநில பாஜக தலைவர்கள் இதை மீறி அரசை விமர்சித்து வருகின்றனர்.

இதனால் எங்களது கட்சி தலைவர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் நீடிக்கிறது. இதை பாஜக விரும்பவில்லை எனில் நாங்கள் எங்கள் முடிவை எடுக்க வேண்டிய நிலை வரும்.
பிற மாநிலங்களைப் போல ஆந்திரா மாநிலமும் வளர்ச்சி அடையும் வரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஏற்கனவே 25 ஆண்டுகாலமாக பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா அண்மையில் உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications