டீ விற்பவரெல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது: மோடியை தாக்கும் சமாஜ்வாடி
ஹார்தோய்: டீ விற்றவர் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி பேரணியில் நரேந்திர மோடி, மத்தியில் ஆளுபவர்களுக்கு வறுமை என்பது தெரியாது. ஆனால் எனக்கு அதனை பற்றி நன்றாக தெரியும். நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது தந்தைக்கு உதவிய நான் ரயில்வே நிலையத்தில் ரயில் டீ விற்றேன். எனவே ரயில்வே அமைச்சரை விட ரயில்வே பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று பேசினார்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஹார்தோய்யில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், டீ விற்றவர் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது. கான்ஸ்டபிள் எப்போதும் கான்ஸ்டபிளாகத்தான் நடந்துகொள்ளமுடியும். ஒருபோதும் அவர் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது. நாட்டின் பிரதமர், தேசத்தின் தலைவர் பதவிக்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
தெருக்கூத்தாடிகள் கூட கூட்டத்தை கூட்டுகிறார்கள். அப்படியிருக்கையில் நரேந்திர மோடிக்கு கூட்டம் கூடுவதால் அவரால் பிரதமராக மாற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications