நான் தான் நிஜ டீக்கடைக்காரன்: மோடிக்கு போட்டியாக 'சாய் துகான்' திறந்த லாலு
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தான் தான் நிஜ டீக்கடைக்காரர் என்று கூறி சாய் துகான் என்ற பெயரில் டீக்கடை துவங்கியுள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இளம் வயதில் டீக்கடைக்காரராக இல்லை என்றும், தான் தான் நிஜமாகவே டீக்கடைக்காரராக இருந்ததாகவும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

லாலு சாய் துகானில் மக்களுக்கு இலவசமாக டீயும், பிஸ்கட்டும் வழங்கப்படுமாம். மேலும் கடைக்கு வருபவர்களிடம் மோடியின் பொய்யான முகம் பற்றிய தகவல்களை தெரிவிப்பார்களாம் லாலுவின் ஆட்கள்.
மாணவனாக இருந்த காலத்தில் லாலு பிரசாத் யாதவ் அவரது சகோதரரின் கடையில் டீ விற்றாராம். அதனால் தான் தான் நிஜமான டீக்கடைக்காரன் என்று கூறுகிறார் லாலு.
இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள செய்தித் தொடர்பாளர் இக்பால் ஷமி கூறுகையில்,
நாங்கள் லாலு சாய் துகானில் தினமும் மாலை வேளையில் 1000 கப் டீயும், பிஸ்கட்டும் மக்களுக்கு கொடுத்து மோடி பற்றியும், லாலு பற்றியும் தெரிவிப்போம். இது போன்று முசாபர்பூரில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் சாய் துகான் திறப்போம். முசாபர்பூரில் மார்ச் 3ம் தேதி மோடியின் பேரணி நடக்கும் வரையில் சாய் துகான் செயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications