மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த பெங்களூர் என்ஜினியர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தமது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
பெங்களூர் ஜேபி நகரில் தங்கியிருந்த சாப்ட்வேர் என்ஜினியர் மதுசூதனன், தனது மனைவி ரூபாவ்யுடன் ஏற்பட்ட சண்டையில் கத்தியை எடுத்து அவரை குத்திக் கொன்றுள்ளார்.
அதன் பிறகு மதுசூதனன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் தூக்கு கயிறு அறுந்து விழுந்துள்ளது. இதனால் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றினார். ஆனால் கைவசம் தீப்பெட்டி கிடைக்கவில்லை.
இதனால் குடியிருப்பு அமைந்துள்ள 13 மாடி உயர கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.












Click it and Unblock the Notifications