தெற்கு பெங்களூர் தொகுதியில் நந்தன் நிலகேனிக்கு எதிராக அனில் கும்ப்ளே போட்டி?
தெற்கு பெங்களூர் தொகுதியில் 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜகவின் அனந்த்குமார். அவர் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஹூப்ளி தொகுதிக்கு இடம் மாற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் லோக்சபா தேர்தலில் ஆதார் அடையாள அட்டையை செயல்படுத்திய நந்தன் நிலகேனி நிறுத்தப்படலாம் என்றும் அவர் தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.
அப்படி நந்தன் நிலகேனி நிறுத்தப்பட்டால் தெற்கு பெங்களூர் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நிறுத்தப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதே அனில் கும்ப்ளேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கிறார் அனில் கும்ப்ளே.