Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில தொழில்நுட்ப கோளாறால் ரயில் விபத்து நடைபெற்றுள்ளது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான்

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனவும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்று இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்தில் சிக்கி தடம்புரண்டது. யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதி பல பெட்டிகள் தடம் புரண்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது.

 Technical failure is the cause of the train accident, Union Minister Dharmendra Singh Pradhan

பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஏறி நசுங்கின. நேற்று இரவு முதல் விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்றது. சிதைந்து கிடந்த ரயில் பெட்டிகளுக்குள் உடல்கள் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன. பல மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்பு பணி தற்போது முடிந்துள்ள நிலையில், 261 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 900 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் பலரும் தீவிர காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட குழு விசாரணை நடைபெறும் எனவும் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் இந்த விசாரணை நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு ஒடிசா மாநிலத்திற்கு இன்று வருகை தந்தார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிரதமர் மோடியும் சற்று நேரத்தில் ஒடிசா செல்ல இருக்கிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இன்று விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான், ஒடிசா ரயில் விபத்து சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில் விபத்து நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பிரதமர் மோடி ஒடிசாவிற்கு வருகை தர இருக்கிறார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+