சில தொழில்நுட்ப கோளாறால் ரயில் விபத்து நடைபெற்றுள்ளது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான்
புவனேஷ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனவும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடைபெற்று இருப்பதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்தில் சிக்கி தடம்புரண்டது. யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதி பல பெட்டிகள் தடம் புரண்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது.

பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஏறி நசுங்கின. நேற்று இரவு முதல் விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்றது. சிதைந்து கிடந்த ரயில் பெட்டிகளுக்குள் உடல்கள் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன. பல மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்பு பணி தற்போது முடிந்துள்ள நிலையில், 261 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 900 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் பலரும் தீவிர காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட குழு விசாரணை நடைபெறும் எனவும் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் இந்த விசாரணை நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு ஒடிசா மாநிலத்திற்கு இன்று வருகை தந்தார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிரதமர் மோடியும் சற்று நேரத்தில் ஒடிசா செல்ல இருக்கிறார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இன்று விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன்பின் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர சிங் பிரதான், ஒடிசா ரயில் விபத்து சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக ரயில் விபத்து நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பிரதமர் மோடி ஒடிசாவிற்கு வருகை தர இருக்கிறார்" என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications