சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் முன் ஜாமீன் டிச.8 வரை நீட்டிப்பு
டெல்லி: குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு வழங்கிய முன் ஜாமீனை டிசம்பர் 8-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டீஸ்டா செதல்வாட், 2002 ஆம் ஆண்டு கோத்ரா படுகொலை சம்பவங்களை வெளிஉலகுக்கு கொண்டுவந்தவர்களில் முக்கியமானவர். இவர் பல்வேறு என்.ஜி.ஓ. அமைப்புகளை நடத்தி வருகிறார். இந்த என்.ஜி.ஓ. அமைப்புகள் மூலம் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற்று இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களுக்கு உதவுகிறார் என்பது குஜராத் அரசின் குற்றச்சாட்டு.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து டீஸ்டாவின் என்.ஜி.ஓக்கள் நேரடியாக நிதி உதவி பெறவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனிடையே 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நினைவகம் கட்டுவதாக கூறி வசூலிக்கப்பட்ட நிதியில் ரூ1.51 கோடி டீஸ்டா மோசடி செய்தார் என்ற வழக்கும் குஜராத் போலீசாரால் போடப்பட்டது. இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டீஸ்டா உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அவருக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் அளித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டீஸ்டாவின் முன்ஜாமீனை டிசம்பர் 8-ந் தேதிவரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் டிசம்பர் 8-ந் தேதிவரை டீஸ்டா செதல்வாட்டை போலீசார் கைது செய்ய முடியாது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications