புகாரைத் திரும்பப் பெற தேஜ்பாலின் உறவினர் எனது தாயாரிடம் பேரம் பேசினார்.. பெண் பத்திரிக்கையாளர்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தருண் தேஜ்பாலின் உறவினர் ஒருவர் டெல்லியில் உள்ள எனது வீட்டிற்குப் போயுள்ளார். அங்கு எனது தாயாரைச் சந்தித்த அவர் புகாரை நான் திரும்பப் பெற வேண்டுமானால் என்ன தர வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
மேலும், நான் எந்த வக்கீலுடன் சட்ட ஆலோசனையை நடத்துகிறேன் என்ற விவரத்தையும் அவர் கேட்டுள்ளார்.
இது எனது குடும்பத்திற்கும், எனக்கும் பெரும் உளைச்சலைக் கொடுத்துள்ளது. இந்த வழக்கை உடைக்க தேஜ்பால் தரப்பு எடுத்துள்ள முயற்சிகளின் ஆரம்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அவர்களிடமிருந்து எனக்கும், எனது குடும்பத்திற்கும் தொடர்ந்து தொல்லைகள் வரலாம் என்று அஞ்சுகிறேன்.
தேஜ்பால் தரப்பினர் என்னையும், எனது குடும்பத்தையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பெண் பத்திரிக்கையாளரின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து தற்போது உ.பி. அரசு பெண் பத்திரிக்கையாளர் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
கோவா போலீஸார் தேஜ்பால் மீது பாலியல் வண்புணர்ச்சி வழக்கைப் பதிவு செய்துள்ளது நினைவிருக்கலாம். அதேசமயம், தேஜ்பால் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண் பத்திரிக்கையாளர், தேஜ்பால் மீது பாலியல் வண்புணர்ச்சி புகாரை வலியுறுத்தவில்லை. இருப்பினும் பத்திரிக்கைச் செய்திகளை வைத்து கோவா போலீஸாரே அந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications