பொது சிவில் சட்டம் - மடாதிபதிகளை ஏன் இழுக்கனும்? மத்திய அரசு மீது தெலுங்கானா சிஎம் கேசிஆர் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பொது சிவில் சட்டம் தொடர்பாக மடாதிபதிகளிடம் மத்திய பாஜக அரசு ஆலோசனை கேட்டிருப்பதற்கு தெலுங்கானா முதல்வரும் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென மத்திய பாஜக அரசு சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. தற்போது ஜூலை 14 வரை கருத்துகள் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய சட்ட ஆணையத்தின் இது தொடர்பான அறிவிப்பில், மதம் சார்ந்த நிறுவனங்களும் கருத்து தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக உள்ளது.

Telangana CM Chandrasekhar Rao opposes to involve dharma gurus in Uniform Civil Code row

பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் போது அனைத்து மக்களுக்குமான ஒரே சட்டமாக இருக்கும். சிறுபான்மையினருக்கான தனித்த சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தொடருகிறது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூறுகையில், மடாதிபதிகள் பூஜைகள் உள்ளிட்டவைகளை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். பொது சிவில் சடத்துக்கு ஏன் மடாதிபதிகளிடம் கருத்து கேட்க வேண்டும். இது தவறான முன்னுதாரணம் என சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+