சிதம்பரம், சிவக்குமார் அடுத்து ரேணுகா சவுத்ரி- ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்
கம்மம்: முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரிக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள், வாரிசுகள் மீதான பழைய வழக்குகள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் சகோதரி மகன், வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கானா கம்மம் மாவட்டத்தில் மோசடி வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரேணுகா சவுத்ரிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
2014 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ரூ1.20 கோடி மோசடி செய்தார் ரேணுகா சவுத்ரி என்பது வழக்கு. ரேணுகா சவுத்ரி மீது புகார் தெரிவித்திருந்த ராம்ஜி நாயக், மன அழுத்தங்களால் 2014-ல் மரணமடைந்தார். இது தொடர்பான வழக்கில் ரேணுகா சவுத்ரி கம்மன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications