மோடிக்கு எதிராக அடுத்த அஸ்திரம்.. உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருகிறது தெலுங்கு தேசம்
பிரதமர் மோடி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.
Recommended Video

டெல்லி: தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
அண்மையில் தெலுங்கு தெசம் கட்சி நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானம் மீதான விவாதத்தின்போது தெலுங்கு தேசம் எம்பிகள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்று குற்றம் சாட்டினர். இருப்பினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் பேர விவகாரத்தில், ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் ரகசிய ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமரும் தவறான தகவல்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். அதோடு, பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கட்டியணைத்து கை குலுக்கினார்.
ராகுல் காந்தியின் செயல் நாடாளுமன்ற விதிகளை மீறியதாக உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது. இதையடுத்து, ராகுல் காந்தி மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதேபோல, ரஃபேல் விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் நோட்டீஸ் கொடுத்தது. இந்த உரிமை மீறல் தீர்மான நோட்டீஸை பரிசீலனை செய்வதாக லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சி எம்பிகள், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியதில் நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதற்காக, பிரதமர் மோடி மீதும், மத்திய அமைச்சர்கள் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்பிகளிடம் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சந்திரபாபு நாயுடு கூறுகையில், ஆந்திரப் பிரதேசம் மறுசீரமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்ட 90 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. இது நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாகும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்ச்சி நிரல்களில் தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடி மீது உரிமை மீறல் திர்மானம் கொண்டுவருவது குறித்து இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications