For Daily Alerts
Just In
டெண்டுல்கர் ஓய்வு: மனமுடைந்த குஜராத் ரசிகர் தூக்கிட்டுத் தற்கொலை
பூஜ்: டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் மன வேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (20) தீவிர சச்சின் டெண்டுல்கர் ரசிகராம். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் விஜய்.
கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின் இறுதிநாள் எனக் கூறி புலம்பி வந்துள்ளார் விஜய். இந்நிலையில், நேற்று சச்சின் ஓய்வு பெற்றதை தாங்க முடியாத விஜய், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.
Comments
English summary
Knowledging about the retirement of Sachin Tendulkar, a young man hailing from Kachchh region of Gujarat, committed suicide by hanging self on Saturday.
Story first published: Sunday, November 17, 2013, 17:41 [IST]