Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வேலி தாண்டிய வெள்ளாடு".. அந்த பையன் வேணாம்.. கண்ணை உறுத்திய அந்த "சிவப்பு" சூட்கேஸ்.. நடுங்கிய மதுரா

மகளை சுட்டுக் கொன்று சூட்கேஸில் அடைத்து வீசிய தந்தை கைதானார்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: அடுத்தடுத்த கொலைகள் நாட்டை உலுக்கி வரும் நிலையில், இன்னொரு கொலையும் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. இது ஒரு ஆணவக் கொலை என்பது கூடுதல் அதிர்ச்சியை தந்து வருகிறது.

நம் நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கென புதிய சட்டம் தேவை என்ற பேச்சு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.. இந்தியாவை பொறுத்தவரையில் சாதி ஆணவ கொலைகளுக்கென தனியாக எந்த சட்டமும் இல்லை.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ்தான் கைதுகள் நடக்கின்றன.. அதன்படிதான்தண்டனைகளும் தரப்படுகின்றன. ஆனாலும், தங்களுடைய சாதியை அடிப்படையாக கொண்டு திட்டம் தீட்டி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே, சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடியை மிக மிக கொடூரமாக கொல்வது அதிகமாகி கொண்டே செல்கிறது.

 ஆணவ கொலை

ஆணவ கொலை

அதனால், வெறும் கொலைகளுக்கான தண்டனைகளை தராமல், ஆணவ கொலைகளுக்கான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் விடாமல் ஒலிக்கிறது.. இது ஒருபுறம் இருந்தாலும், ஆணவ கொலைகளும் அதிகரித்தபடியே உள்ளன.. நம் தமிழ்நாட்டில் ஆணவ கொலை என்றாலே அரியலூர் மாவட்டம்தான் கண்முன் நிற்கிறது.. அந்த அளவுக்கு ஆறாத ரணங்கள் இந்த மாவட்டத்தில் நடந்துள்ளதை மறுக்க முடியாது.. அதேபோல, வடமாநிலங்களிலும் இதே பிரச்சனைதான் தலைவிரித்தாடுகிறது.. இதில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.. இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 சிவப்பு நிற சூட்கேஸ்

சிவப்பு நிற சூட்கேஸ்

மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே அருகே, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெரிய சிவப்பு கலர் சூட்கேஸ் கிடந்தது.. அந்த சூட்கேஸ் அங்கேயே நீண்ட நேரமாக இருந்தது.. இதனால், அங்கிருந்த தொழிலாளர்கள், அதை கவனித்துவிட்டு, போலீஸாருக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து, அந்த சிவப்பு கலர் சூட்கேஸை திறந்து பார்த்தனர்.. அதில், பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள்.. அந்த பெண்ணின் முகம், தலையில் ரத்தம் உறைந்து கிடந்தது.. உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன.

சூட்கேஸ்

சூட்கேஸ்

இதையடுத்து போலீசார் விசாரணையை கையிலெடுத்தனர்.. அப்போதுதான், இறந்துபோன பெண், தெற்கு டெல்லியில் படர்பூரில் வசித்து வருபவர் என்பதும், அவர் பெயர் 22 ஆயுஷி சவுத்ரி என்பதும் தெரியவந்தது... அதுமட்டுமல்ல, அந்த பெண்ணை கொன்றது அவரது பெற்ற அப்பாவே என்பது அடுத்த அதிர்ச்சி வெளியானது.. இதையடுத்து, போலீஸார் அப்பெண்ணின் அப்பா நிதேஷ் யாதவை கைது செய்தனர்.. இது குறித்து மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 கொலை நகரம்

கொலை நகரம்

இதை அங்குள்ள போலீசார் நோட்டமிட்டு, அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.. அப்போதுதான், கொலை செய்த உண்மையை ஒப்புக் கொண்டார்... இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை கண்டுபிடிக்க, தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.. இறந்து போன பெண் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் இனி விசாரணையில் வெளிவர வாய்ப்புள்ளது" என்றார்.. தலைநகரம் கொலை நகரமாகி வரும் நிலையில், உ.பியிலும் இப்படி ஒரு சம்பவங்கள் நடந்து வருவதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர் அம்மக்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+