Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதம்பூரில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்... 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத் என்பவன் உயிருடன் பிடிபட்ட நிலையில் தற்போது அதே பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 2 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

புதன்கிழமைதான் இப்பகுதியில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பிணையாளிகள் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்களின் புத்திசாலித்தனத்தால் அவர்களைப் பிடித்துச் சென்ற தீவிரவாதி முகம்மது நவேத் ராணுவத்தினரிடம் சிக்கினார்.

Terror Attack at Police Post in Udhampur's Basantgarh Area, 2 Officers Injured

இந்த நிலையில் உதம்பூரின் பசந்த்கர் பகுதியில் நேற்று இரவு தீவிரவாதிகள் புகுந்து போலீஸ் செக்போஸ்ட்டைத் தாக்கியுள்ளனர். இதில் 2 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தீவிரவாதிகள் கத்துவாவிலிருந்து உஜ் ஆற்றின் மூலமாக இப்பகுதிக்குள் வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜம்முவுக்கு அருகே உள்ள ககபோரா கிராமத்தில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸாரும், ராணுவத்தினரும் விரைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+