ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

ஹிஜ்புல் முஜாஹிதீன் எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் ரியாஸ் நைகூ. இவர் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பலேவேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டார்.

Terror Group Hizbul Mujahideens Chief Shot Dead In Encounter In Srinagar

இதனால் இவர் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் இந்த ஆண்டு மே மாதம் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து அமைப்பின் தலைவராக சயிஃபுல்லா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சயிஃபுல்லா ஸ்ரீநகருக்கு வந்திருப்பதாகவும் அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸார் சயிஃபுல்லாவை சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் முஜாஹிதீன் அமைப்பில் முதலிடத்தில் உள்ள கமாண்டர் சயிஃபுல்லாதான். இவர் தற்போது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது மிகவும் வெற்றிக்கரமான ஆபரேஷன். இது போலீஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மிகப் பெரிய சாதனையாகும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+