பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்க பாக். விமானப்படை தளத்தில் பயிற்சி எடுத்த தீவிரவாதிகள்
டெல்லி: பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்க தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளத்தில் பயிற்சி எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. பதன்கோட் தாக்குதலுடன் தொடர்புள்ள தீவிரவாத அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வாக்குறுதியை எப்படி நம்புவது என்பது போன்று ஒரு தகவல் கிடைத்துள்ளது.

பதன்கோட்டில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளம் ஒன்றில் பயிற்சி எடுத்துள்ளனர். அங்கு அவர்கள் போலியாக தாக்குதல் நடத்தி பயிற்சி எடுத்துள்ளனர். இந்த பயிற்சி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
மிகவும் பாதுகாப்பான பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் எப்படி நுழைவது என்று பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பதன்கோட் விமானப்படை தளம் 1,900 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications