2 லட்சம் துப்பாக்கிகளை கீழே போடுகிறது இந்திய ராணுவம்.. ஏன் தெரியுமா?
இந்திய ராணுவத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள 2 லட்சம் சிறிய ரக துப்பாக்கிகளுக்கு விடை கொடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் நவீன தொழில்நுட்பத்தின் மூலம்
டெல்லி: ராணுவத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள, 'இன்சாஸ்' எனப்படும், இந்திய சிறிய ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, புதிய நவீன ரக துப்பாக்கிகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1988ம் ஆண்டு இந்திய சிறிய ரக துப்பாக்கிகள் அமைப்பு முறையின் 2 லட்சம் எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டு அவை இந்திய ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ரக துப்பாக்கிகள் இந்திய எல்லைப் பகுதிகளிலும், நக்ஸல் தடுப்பு நடவடிக்கை பகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த துப்பாக்கிகளின் பயன்பாடு அடுத்த ஆண்டு முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டு புதிய ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது
கடந்த 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இந்த சிறிய ரக துப்பாக்கிகளால் நீண்ட தூரம் உள்ள இலக்கை தாக்கும் திறன் இல்லை. அதனால் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ராணுவத்துக்கு அதி நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
உலகின் சிறிய ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஜெர்மனியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளை கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் புதிய ரக துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் இந்தியா உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 18 நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைத்தவுடன் தொழில்நுட்ப தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய துப்பாக்கிகளை தயார் செய்வதற்கான பணிகள் தற்போது தொடக்க நிலையில் உள்ளன. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து வரும் 2018-இல் இருந்து, இந்த நவீன ரக துப்பாக்கிகள் பயன்பாட்டு வரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications