அதிமுகவின் முடிவால் பாஜகவுக்கு அரசியல் லாபம்
Recommended Video

டெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்த பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற தேவையான எம்.பிக்கள் பலம், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உள்ள நிலையில், அதிமுக மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி உதவியால், வாக்கு வித்தியாசத்தை மூன்றில் இரண்டு பங்காக உயர்த்தி காட்டி மக்கள் மத்தியில் தங்களுக்கு உள்ளதாக காண்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

அதிமுகவுக்கு 37 எம்பிக்களும், பிஜு ஜனதாதளத்திற்கு 20 எம்.பிக்களும் உள்ளனர். அவர்கள் வாக்குப்பதிவை புறக்கணிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை அதிகரித்து காண்பித்து பாஜகவுக்கு சாதகமாக முடியக்கூடிய முடிவாகும். இதைத்தான் பாஜக எதிர்பார்க்கிறது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் மத்தியில் பாஜக இன்னும் செல்வாக்கு உள்ள கட்சிதான் என்பதை காண்பித்துக்கொள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தீர்மானம் உதவப்போகிறது.












Click it and Unblock the Notifications