பழங்குடி பெண் நிர்வாண ஊர்வலம்! கணவர், மாமியார் செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மாமியாரால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவிய நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "21 வயது மதிக்கத்தக்க பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இருப்பினும் இந்த திருமணத்தை தாண்டி அப்பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்ததாக பெண்ணின் மாமியார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அப்பெண்ணை மாமியாரும், திருமணம் செய்த கணவரும் தாக்கி வந்திருக்கின்றனர். இந்த தாக்குதலின் உச்சமாகதான் 31ம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வேறு ஆணுடன் இருந்த அந்த பெண்ணை மாமியாரும், கணவனும் வலுக்கட்டாயமாக தூக்கி வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அப்பெண்ணின் ஆடைகளை உருவி அவரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தவர்கள் அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இது தற்போது சோஷியல் மீடியாக்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து சம்பவம் குறித்து விசாரித்து இதில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்திருக்கிறோம். மேலும் கைது நடவடிக்கைகள் தொடரும்" என ராஜஸ்தானின் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) உமேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், "குடும்ப தகராறு காரணமாக ஒரு பெண்ணை அவரது மாமியார் நிர்வாணமாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஏடிஜியை சம்பவ இடத்துக்கு அனுப்பி இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை.இந்த குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விரைவு நீதிமன்றத்தால் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. எதிர்க்கட்சியான பாஜக, "ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு தேர்தலில் மக்கள் காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள்" என்று கூறியுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications