ஆஸ்திரேலிய அரசுக்கு இந்தியா எந்த நேரத்திலும் உதவும்- டுவிட்டரில் பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிக்கலான தருணங்களில் ஆஸ்திரேலிய அரசுக்கு தோளோடு தோள் நின்று இந்தியா உதவிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்றிரவு ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிட்னி மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று காலை, ஆஸ்திரேலியாவில் பிணையக் கைதிகளாக பலர் பிடித்து வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டர் தளத்தில் மோடி குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் மனிதத் தன்மையற்றது என்றும், துரதிருஷ்டமானது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications