நீதிமன்றம் அதன் கடமையை செய்துள்ளது.. அப்பாவுக்கு ஜாமீன் கேட்போம்.. லாலு மகன் தேஜஸ்வி!
லாலு பிரசாத்தின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
ராஞ்சி: நீதிமன்றம் தனது கடமையை செய்திருப்பதாக லாலு பிரசாத்தின் தண்டனை குறித்து அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மேலும் லாலுவின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லாலுவின் தண்டனை குறித்து அவரது மகன் தேஜஸ்வி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது நீதிமன்றம் தனது கடமையை செய்திருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
மேலும் தண்டனை விவரத்தை படித்து பார்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். லாலுவுக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்றும் தேஜஸ்வி கூறினார். தேஜஸ்வி பீகாரின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications