மகாராஷ்டிராவில் அவ்வளவு வெயிலுக்கு சான்ஸ் இல்லையே.. வானிலை ஆய்வு மையம் விசாரணை
மகாராஷ்டிரத்தில் வழக்கத்துக்கு மாறாக 116 பாரன்ஹீட் வெப்பநிலை என்பது தவறாக பதிவாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் வானிலை ஆய்வு மையம் விசாரணை நடத்தவுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தாலும் பிர்ராவில் 116 பாரன்ஹீட் வெப்பநிலை என்பது தவறாக பதிவாகியிருக்குமோ என்று சந்தேகத்தின்பேரில் வானிலை மைய அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று நாட்டின் மற்ற பகுதிகளை விட வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. அம்மாநிலத்தின் ராய்குட் மாவட்டத்தின் பிர்ரா டவுனில் வெப்பநிலையில் 116 பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. செல்சியஸில் 46.5 டிகிரியாகும்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், தெற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் 100 பாரன்ஹீட்டாக வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் வெப்பம் தகித்து வந்தாலும் வழக்கத்துக்கு மாறாக இந்தளவு வெப்பநிலை பதிவாக வாய்ப்பில்லை என்பதால் அந்தளவு வெப்பநிலையானது தவறாக பதிவாகியிருக்குமோ என்று வானிலை மைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கையில், பிர்ராவில் கடந்த திங்கள்கிழமை 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருந்தது. செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் அன்று வெப்பநிலை பதிவாகவில்லை. இந்நிலையில் பிர்ராவில் 46.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக கூறப்படுவதில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதன் அருகில் உள்ள இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகவில்லை. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தவுள்ளோம்.
மேலும் பிர்ரா கிராமமானது அணைக்கு அருகே உள்ளது. அதைச்சுற்றி குறைந்தபட்சம் 2000 அடி உயரத்திலாலான மலைகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் அங்கு 46.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது சந்தேகமளிப்பதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications