இனிமேல் ரயிலில் பயணம் செய்ய ஒரு மாதத்திற்கு 6 முறைதான் பதிவு செய்ய முடியும் !
டெல்லி: இனிமேல் ரயிலில் பயணம் செய்ய ஒரு மாதத்திற்கு 6 முறை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற புதிய முறையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்பெல்லாம் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்வதற்கு ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் பல நேரங்களில் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில நேரங்களில் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.

பிறகு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ரயில்வே நிர்வாகம் இ-டிக்கெட் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இதனால் இணைய வசதி கொண்டோர் தங்கள் வீட்டிலிருந்த படியே தாங்கள் பயணம் செய்யும் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் ஒரு சிலர் இந்த இ-டிக்கெட் முறைகளையும் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஒருவர் ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசி-யில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு 10 முறை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் சமீப காலமாக பெரும்பாலான பயனாளர்கள் 6 தடவைக்கு மேல் பயணம் செய்ய முன்பதிவு செய்தது கிடையாது. சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே 6 முறைக்கு மேல் பயன்படுத்துகின்றனர். இந்த 10 சதவீதமும் முறைகேடாக புக் செய்ய வாய்ப்பு உள்ளதாக சந்தேகப்படுவதாக கூறப்படுகிறது.
பாஸ்போர்ட் வாங்குறதை சுலபமாக்கிட்டு ரயில் டிக்கெட் வாங்குறதை சிரமமாக்கிட்டாங்க
— காட்டுப்பயல் (@sundartsp) January 29, 2016 இதை கட்டுப்படுத்த ரயில்வே அமைச்சம் புதிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி வெப்சைட்டில் கணக்கு வைத்திருப்போர் ஒரு மாதத்திற்கு 10 முறை டிக்கெட்டுக்கள் முன்பதிவுகள் செய்யலாம். அதை தற்போது 6 முறையாக குறைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற பிப்ரவரி 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரு அக்கவுண்டுக்கு இரண்டு டிக்கெட்டுக்களும், தக்கல் நேரத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரையும் இரண்டு டிக்கெட்டுக்கள்தான் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications