Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை... கல்யாண வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கதறிய மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் புதுமண பெண் மாரடைப்பால் இறந்தததால், திருமண நிகழ்ச்சி துக்க நிகழ்ச்சியாக மாறியது.

தாயை பிரிந்து மாமியார் வீட்டிற்கு செல்ல மனம் இன்றி மனம் உடைந்து அழுததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒடிசாவின் சோனேப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் முடிந்த பின் ஒவ்வொரு பெண்ணும் பாசமாக வளர்த்த பெற்றோரை பிரிய மனம் இல்மல் அழுவார்கள். ஆனந்த கண்ணீருடன் துக்கமும் பலருக்கு தொண்டையை அடைக்கும். அப்படித்தான் ஒடிசாவின் சோனேப்பூரில் நடந்திருக்கிறது ஆனால் மணப்பெண் மாரடைப்பால் பலியாகிவிட்டார்.

திருமண நிச்சயம்

திருமண நிச்சயம்

ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தில் ஜூலுண்டா கிராமத்தைச் சேர்ந்த ரோஸி சாஹு என்ற இளம் பெண்ணுக்கும் பலங்கீர் மாவட்டத்தில், டெட்டல்கான் கிராமத்தைச் சேர்ந்த பிசிகேசன் என்பவருடன் திருமணம் நடத்த பெற்றோர்கள் நிச்சயம் செய்தனர்.

மணமகன் வீடு

மணமகன் வீடு

நிச்சயம் செய்தபடி அண்மையில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. ரோஸி சாஹுவிற்கு பிசிகேசன் திருமண மேடையில் தாலி கட்டினார். .

திருமணச் சடங்குகள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக நடந்தது. பின்னர் மணப்பெண் ரோஸி, தனது குடும்பத்தினரை பிரிந்து மனமகன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்.

துக்கம் தாங்கவில்லை

துக்கம் தாங்கவில்லை

ரோஸியை அவரது பெற்றோர் அவரது மாமியார் வீட்டுக்கு அனுப்பத் தயாராகி கொண்டிருந்தார்கள், ​​ரோஸி அப்போது பெற்றோரை பிரிந்து செல்ல மனம் இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதார், ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் மயக்கம் அடைந்து தரையில் விழுந்தார்.

முகத்தில் தண்ணீர்

முகத்தில் தண்ணீர்

அதிர்ச்சி அடைந்த ரோசியின் குடும்பத்தினரும் உறவினர்களும் கைகளை மசாஜ் செய்து முகத்தில் தண்ணீர் தெளித்து, ரோஸி எழுப்ப முயன்றனர்.

அவரது குடும்ப உறுப்பினர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது.

மணப்பெண் சாவு

மணப்பெண் சாவு

இதையடுத்து ​​ரோஸியை உடனடியாக துங்குரிபாலி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (சி.எச்.சி) அழைத்துச் சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும் சோகம்

பெரும் சோகம்

பிரபல ஆங்கில ஊடகத்திடம் இதுபற்றி பேசிய ஜூலுண்டா கிராமத்தில் வசிக்கும் ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையை இழந்ததால் ரோஸி சமீபத்தில் துன்பத்தில் இருந்தார். அவரது தாய்மாமனின் குடும்பத்தினரும் சில சமூக சேவையாளர்களும் தான் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+