நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து சசிகலா கணவர் நடராஜனுக்கு விலக்கு அளித்தது சுப்ரீம்கோர்ட்!
நீதிமன்றத்தில சரண் அடைவதில் இருந்து சசிகலா கணவர் நடராஜனுக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதியளித்துள்ளது.
டெல்லி: சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜனுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து சசிகலா கணவர் நடராஜனுக்கு சுப்ரீம்கோர்ட் விலக்கு அளித்துள்ளது.
1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்ஸஸ் சொகுசு காரை நடராஜன் இறக்குமதி செய்தார். புதிய காரை இறக்குமதி செய்ததற்காக ரூ1.6 கோடி வரி செலுத்த வேண்டும். ஆனால் புதிய காரை 1993-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழைய கார் என கூறி நடராஜன் வரி ஏய்ப்பு செய்தார்.
இது தொடர்பான வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 2010-ம் ஆண்டு சசிகலா கணவர் நடராஜன், தினகரனின் தம்பி ஜெஜெ டிவி பாஸ் என்கிற பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த யோகேஷ் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளர் சுஜாரிதா ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நடராஜனுக்கு சிறை தண்டனை
இத்தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

சரணடைய அவகாசம் கோரப்பட்டது
அப்போது நடராஜன் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அப்போது நடராஜன் சரணடைய அவகாசம் கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் நடராஜனின் கோரிக்கையை நிராகரித்தது.

விலக்கு கோரி மனு
இந்நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் நடராஜன் மனு அளித்தார். நடராஜன் மனுவை அவசர வழக்காக பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.

நடராஜன், பாஸ்கரனுக்கு விலக்கு
இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நடராஜன் மற்றும் பாஸ்கரனுக்கு விலக்கு அளித்துள்ளது. சொகுசு கார் இறக்குமதி வழக்கில் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருவரும் தற்காலிகமாக சிறைக்கு செல்வதில் இருந்து சுப்ரீம்கோர்ட் நீதிபதி தீபக் குப்தா விலக்கு அளித்துள்ளார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
சசிகலாவின் கணவரான நடராஜனுக்கு அண்மையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிக்சை செய்யப்பட்டது. இதனைக் காரணம் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அண்மையில் பரோலில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications