ஆக்ரோஷ துர்கை சரி.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கையை பாருங்கள்!
கொல்கத்தா: இந்த ஆண்டு துர்கா பூஜையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியலை சொல்லும் சிலைகள் நவராத்திரி விழாவில் வைக்கப்பட்டிருந்தது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பொதுவாக துர்கா பூஜை,நவராத்திரி, தசரா விழா என மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி விழா 9 நாட்களும் துர்கா பூஜை என கொண்டாடப்படும்.
இந்த கொண்டாட்டத்தின் போது துர்கா தேவி 10 கைகளுடன் ஆயுதங்களை ஏந்தியபடி மிகவும் ஆக்ரோஷமாக கொல்கத்தா வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் அவதரிப்பார்.

பொதுமக்கள்
இதை பார்க்க பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை தருவர். இந்த ஆண்டும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் களைக் கட்டத் தொடங்கிவிட்டது. கொல்கொத்தாவில் பரிஷா கிளப் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அவதரிக்கும் துர்காதேவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா ஊரடங்கு
அண்மையில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் பல 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தங்கள் சொந்த ஊர்களை அடைந்தனர். கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள் என பலர் வேலையின்றி ஊதியமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல், உணவு செலவுக்கே சமாளிக்க முடியாமல் தவித்தனர்.

குழந்தைகள்
இதையடுத்து நிலைமை மோசமடைந்ததால் சொந்த ஊர்களுக்கே செல்லலாம் என முடிவெடுத்து அவர்கள் வாகனங்கள் இல்லாவிட்டாலும் நடந்தே சென்றனர். மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் இடுப்பில் அமரவைத்து கொண்டு பயணம் மேற்கொண்டனர்.

சமூகவலைதளங்கள்
இதை பார்த்த பலர் மத்திய அரசின் திடீர் ஊரடங்கிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆண்களை காட்டிலும் பெண்களே குழந்தைகளை சுமந்து கொண்டு சென்றது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்தியாவில் ஊரக பகுதிகளை சேர்ந்த பெண்களின் உருவில் துர்கை அவதரித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை கலை இயக்குநருக்கு வந்தது.

சிலைக்கு உயிர்
இதையடுத்து அந்த யோசனைக்கு சிற்பி பல்லப் பவ்மிக் உயிர் கொடுத்தார். இதுகுறித்து ரிந்து தாஸ் கூறுகையில் இந்த முறை துர்கா தேவி மூலம் சமூகத்திற்கு கருத்து சொல்ல விரும்பினேன். அதனால் நகைகள் எதுவும் அணியாமல் கையில் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் குழந்தைகளையும் உணவு தானியங்களையும் ஏந்தியபடி நடந்து செல்லும் வகையில் துர்கா தேவியை வடிவமைக்க விரும்பினேன்.

குழந்தைகள்
அதில் வண்ணங்கள் ஏதும் இல்லாமல் செதுக்கியுள்ளேன். நான் விரும்பும் துர்கா தேவி பலூன்களை விற்று அதன் மூலம் குழந்தைகளின் பசியை போக்கும் தாயாக இருக்கவே விரும்பினேன். அதனால்தான் இந்த முயற்சி என ரிந்து தாஸ் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications