ஆக்ரோஷ துர்கை சரி.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கையை பாருங்கள்!
கொல்கத்தா: இந்த ஆண்டு துர்கா பூஜையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியலை சொல்லும் சிலைகள் நவராத்திரி விழாவில் வைக்கப்பட்டிருந்தது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பொதுவாக துர்கா பூஜை,நவராத்திரி, தசரா விழா என மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி விழா 9 நாட்களும் துர்கா பூஜை என கொண்டாடப்படும்.
இந்த கொண்டாட்டத்தின் போது துர்கா தேவி 10 கைகளுடன் ஆயுதங்களை ஏந்தியபடி மிகவும் ஆக்ரோஷமாக கொல்கத்தா வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் அவதரிப்பார்.

பொதுமக்கள்
இதை பார்க்க பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை தருவர். இந்த ஆண்டும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் களைக் கட்டத் தொடங்கிவிட்டது. கொல்கொத்தாவில் பரிஷா கிளப் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அவதரிக்கும் துர்காதேவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா ஊரடங்கு
அண்மையில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் பல 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தங்கள் சொந்த ஊர்களை அடைந்தனர். கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள் என பலர் வேலையின்றி ஊதியமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல், உணவு செலவுக்கே சமாளிக்க முடியாமல் தவித்தனர்.

குழந்தைகள்
இதையடுத்து நிலைமை மோசமடைந்ததால் சொந்த ஊர்களுக்கே செல்லலாம் என முடிவெடுத்து அவர்கள் வாகனங்கள் இல்லாவிட்டாலும் நடந்தே சென்றனர். மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் இடுப்பில் அமரவைத்து கொண்டு பயணம் மேற்கொண்டனர்.

சமூகவலைதளங்கள்
இதை பார்த்த பலர் மத்திய அரசின் திடீர் ஊரடங்கிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆண்களை காட்டிலும் பெண்களே குழந்தைகளை சுமந்து கொண்டு சென்றது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்தியாவில் ஊரக பகுதிகளை சேர்ந்த பெண்களின் உருவில் துர்கை அவதரித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை கலை இயக்குநருக்கு வந்தது.

சிலைக்கு உயிர்
இதையடுத்து அந்த யோசனைக்கு சிற்பி பல்லப் பவ்மிக் உயிர் கொடுத்தார். இதுகுறித்து ரிந்து தாஸ் கூறுகையில் இந்த முறை துர்கா தேவி மூலம் சமூகத்திற்கு கருத்து சொல்ல விரும்பினேன். அதனால் நகைகள் எதுவும் அணியாமல் கையில் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் குழந்தைகளையும் உணவு தானியங்களையும் ஏந்தியபடி நடந்து செல்லும் வகையில் துர்கா தேவியை வடிவமைக்க விரும்பினேன்.

குழந்தைகள்
அதில் வண்ணங்கள் ஏதும் இல்லாமல் செதுக்கியுள்ளேன். நான் விரும்பும் துர்கா தேவி பலூன்களை விற்று அதன் மூலம் குழந்தைகளின் பசியை போக்கும் தாயாக இருக்கவே விரும்பினேன். அதனால்தான் இந்த முயற்சி என ரிந்து தாஸ் தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications