நாட்டில் மோடி அலை எல்லாம் இல்லை, கோப அலை தான் வீசுகிறது: கெஜ்ரிவால்
மும்பை: நாட்டில் மோடி அலை எல்லாம் இல்லை. மாறாக கோப அலை தான் வீசுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மும்பை விக்ரோலி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

மோடி அலை
நாட்டில் மோடி அலை வீசுவதாக கடந்த ஆண்டில் இருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் ஹரியானாவுக்கு சென்றேன். அங்கு மோடி அலை எதுவும் வீசவில்லை. உத்தர பிரதேசத்திற்கு சென்றேன். அங்கும் எந்த மோடி அலையையும் பார்க்கவில்லை. இன்று மும்பைக்கு வந்துள்ளேன். இங்கும் மோடி அலையை பார்க்க முடியவில்லை.

கோப அலை
ஆமாம், நாட்டில் ஒரு அலை வீசத் தான் செய்கிறது. அது மக்களின் கோப அலை. காங்கிரஸை நீக்கிவிட்டு பாஜகவை கொண்டு வர விரும்பவில்லை.

ஆம் ஆத்மி கட்சி
மக்கள் நாட்டின் நடைமுறைகளை மாற்ற விரும்புகிறார்கள். நேர்மையான அரசியல் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். மக்கள் ஆம் ஆத்மி கட்சியிடம் நம்பிக்கை வைத்துள்ளனர்.

டெல்லி
எங்களுக்கு டெல்லி சட்டசபை தேர்தலில் 4 முதல் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று சில சேனல்கள் தெரிவித்தன. ஆனால் எங்களுக்கு 28 சீட்கள் கிடைத்தன.

ராகுல், மோடி
இந்த முறை நாடாளுமன்றத்தில் ஒரு அதிசயம் நடக்கவிருக்கிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, நரேந்திர மோடி, கபில் சிபல், நிதின் கட்காரி மற்றும் எதியூரப்பாவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகள்
குஜராத்தை முன்னேற்றிவிட்டதாக மோடி கூறி வருகிறார். ஆனால் அவர் ஆட்சியில் குஜராத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றார் கெஜ்ரிவால்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications