மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா
இந்தூர்: நாட்டில் மோடி அலை எதுவும் வீசவில்லை என்று நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
இதையடுத்து அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயண் பட்டேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

மோடி அலை
நாட்டில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை. அப்படி வீசினால் அவர் ஏன் பாதுகாப்பான தொகுதியாக தேர்வு செய்து போட்டியிட வேண்டும்.

என்னைப் போல்
மோடி என்னைப் போன்று கட்சிகிக்கு ஆதரவு இல்லாத தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டியது தானே. 35 முதல் 40 ஆண்டுகளில் பாஜக வெற்றி பெறாத தொகுதியை தேர்வு செய்து அவர் போட்டியிட்டிருக்கலாமே.

பொய் எக்ஸ்பிரஸ்
பொய் எக்ஸ்பிரஸ் ஒன்று குஜராத்தில் இருந்து ஓடுகிறது. மற்றொன்று மத்திய பிரதேசத்தில் இருந்து ஓடுகிறது. ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

சிவராஜ் சிங் சவுகான்
மத்திய பிரசேத்தில் 4 வயது குழந்தை கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

ஊழல்
மத்திய பிரதேசத்தில் ஊழலுக்கு பஞ்சமே இல்லை. சுரங்க ஊழல், ஓய்வூதிய ஊழல், சுக்னிதேவி கல்லூரி நில ஊழல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

காங்கிரஸ்
காங்கிரஸ் மக்களை சாதி, மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது இல்லை. காங்கிரஸ் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து மத, சமூகங்களைச் சேர்ந்த மக்களை இணைத்து பணியாற்றுகிறது.

செல்போன்
ஒரு காலத்தில் வசதி உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த செல்போன், கம்ப்யூட்டர்கள், இரு சக்கர வாகனங்கள் தற்போது அனைவருக்கும் கிடைத்துள்ளதற்கு காங்கிரஸின் கொள்கைகள் தான் காரணம் என்றார் நக்மா.












Click it and Unblock the Notifications