''என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள்''... பாஜக மீது மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு!
கொல்கத்தா: தனது பிரசாரத்தில் கூட்டம் வராததால் அமித் ஷா விரக்தியடைந்து என்னை கொல்ல பார்க்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக, அவர் கொல்கத்தாவில் அமர்ந்து டி.எம்.சி தலைவர்களை துன்புறுத்தும் சதித்திட்டத்தை மேற்கொள்கிறார் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் ரோயாரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரென அடிபட்டு காயம் அடைந்தார். தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். ஆனால் தேர்தல் ஆணையம் மம்தா காரின் கதவு இடித்து காயமடைந்ததாக கூறியது.
மம்தா வாக்குகளை பெற நடமாடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மம்தா தற்போது வீல் சேரில் அமர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மெஜியாவில் நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- தனது பிரசாரத்தில் கூட்டம் வராததால் அமித் ஷா விரக்தியடைந்துள்ளார். நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக, அவர் கொல்கத்தாவில் அமர்ந்து டி.எம்.சி தலைவர்களை துன்புறுத்தும் சதித்திட்டத்தை மேற்கொள்கிறார்.
அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் என்னைக் கொல்ல விரும்புகிறார்களா? என்னைக் கொன்றதன் மூலம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications