கணவன் மனைவி உறவில் 3வது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்: சுப்ரீம்கோர்ட் அதிரடி
கணவன் மனைவி உறவில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video

டெல்லி: கணவன் மனைவி உறவில் மூன்றாவது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையில் மூன்றாவது நபர் தலையீட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது வடமாநிலங்களில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக்தி வாஹினி என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அதில் கட்டப்பஞ்சாயத்துகளால்தான் ஆணவக் கொலைகள் அதிகம் நடப்பதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கினர்.

சட்டவிரோதம்
இதில், இரு மனமொத்த தம்பதியின் திருமணத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத முறையில் கட்டப்பஞ்சாயத்துகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டவிதிகளை உருவாக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

மனு தள்ளுபடி
மேலும் அரசு சட்டவிதிகளை உருவாக்கும் வரை இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.கட்டப்பஞ்சாயத்துக்கு எதிராக சக்தி வாஹினி அமைப்பு தொடர்ந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications