"இது சும்மா டிரைலெர்தான்.. மெயின் பிக்சர 16ம்தேதி பார்ப்பீங்க..": மோடி
காந்திநகர்: சீமாந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக கூட்டணி பெற்றுள்ள வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான துவக்க விழா என்று பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திரா பிரிந்து ஜூன் மாதம் 2-ந்தேதி அதிகாரப்பூர்வமாக தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என இரு மாநிநிலங்கள் உருவாக உள்ளன. 2 மாநிலங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 10 மாநகராட்சி, 145 நகராட்சிகளுக்கு மார்ச் 30-ந்தேதியும், மற்றும் ஊராட்சி பதவிகளுக்கு ஏப்ரல் 6, 11-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இருப்பினும் இரு பிராந்தியங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபிறகுதான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சீமாந்திராவில் 36 நகராட்சிகளை தெலுங்குதேசம் கைப்பற்றியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 934 உள்ளாட்சி இடங்களை தெலுங்குதேசமும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 634 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆனால் காங்கிரஸால் வெறும் 45 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
அதே நேரத்தில் தெலுங்கானாவில் 9 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சியும் 5 நகராட்சிகளையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கைப்பற்றியுள்ளன. மேலும் பல நகராட்சிகளில் காங்கிரஸ் முன்னணி வகித்து வருகிறது. மாநகராட்சிகளில் நிஜாமாபாத், ராமகுண்டத்தை காங்கிரஸும் கரீம்நகரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கைப்பற்றியுள்ளன. மொத்தமாக தெலுங்கானாவில் காங்கிரஸ் 394 இடங்களையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 245 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி இங்கு 129 உள்ளாட்சி இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து தனது டுவிட்டர் வலைத்தளத்தில் நரேந்திரமோடி கூறியுள்ளதாவது: வரும் 16ம்தேதி முடிவுகளுக்கான துவக்க விழாதான் இந்த வெற்றி. சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுமே நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தரப்போகின்றன. பாஜக கூட்டணிக்கு அதிக இடங்களை அளித்ததற்காக சீமாந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications