மத்தியில் நடப்பது 'ராம பக்தர்களின்' அரசாங்கம்: சொல்வது அமைச்சர் நிதின் கட்காரி
டெல்லி: மத்தியில் 'ராம பக்தர்களின்' அரசாங்கம் நடைபெறுகிறது என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறியிருப்பது புதுசர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்காரி, டெல்லியில் ராம பக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டெல்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப் பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்திய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்கு காரணமே இந்த கட்சிகளின் ஜாதிய அரசியல்தான் என்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை இந்துத்துவா அமைப்புகள் கூறி வந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நிதின் கட்காரியும்ம் 'ராம பக்தர்களின்' அரசுதான் டெல்லியில் அமைந்துள்ளது என்று பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications