For Daily Alerts
Just In
எப்ப அண்ணா, அண்ணியோட வருவீங்க?: அமேதி மக்களின் கேள்விக்கு ராகுலின் பதில் இது தான்!
அமேதி: எப்பொழுது மனைவியுடன் சேர்ந்து வருவீர்கள் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியிடம் அமேதி தொகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான அமேதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
எந்தமுறையும் அவரிடம் கேட்காத கேள்வியை மக்கள் இம்முறை கேட்டுள்ளனர். மக்கள் அவரிடம் கேட்டதாவது,
அண்ணா எப்பொழுது வரை இப்படி தனியாக வருவீர்கள்? அண்ணியை எப்பொழுது அழைத்து வருவீர்கள்? என்று கேட்டனர்.
இந்த கேள்வியால் அதிர்ச்சி அடைந்த ராகுல் லேசாக சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். 45 வயதாகும் ராகுலிடம் தொண்டர்கள் திருமணம் பற்றி அடிக்கடி கேட்டு வருகிறார்கள். அவரும் சிரித்து சிரித்தே மழுப்புகிறார்.
Comments
English summary
People of Amethi asked congress vice president Rahul Gandhi as to when will he come with his wife.
Story first published: Friday, August 21, 2015, 12:36 [IST]