துஜே தேக்கா தோ யே ஜானா சனம்.. ஸ்ரீநகர் துலிப் தோட்டத்துக்குப் போய் ஆடிப் பாடலாமா! Video
ஸ்ரீநகர்: முடியலங்க.. முடியல.. தலைமுடி முதல் காலடி வரை வியர்த்துக் கொட்டுகிறது. அனல் மேலிட்ட பறவைகளாய் அவிந்து கொண்டிருக்கிறோம்.. நில்லுங்க சார் நில்லுங்க.. புலம்பலை விடுங்க.. வாங்க காஷ்மீருக்குப் போய்ட்டு வரலாம்...!
இங்க சல்லுன்னு வெயில் உச்சி மண்டைய உறைய வைக்கிற இந்த ஏப்ரல் மாதத்தில் காஷ்மீர் போனால் எப்படி இருக்கும். அதுவும் சினிமா டூயட்ல வருகிற (குறிப்பாக அந்த தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே டூயட்ல வர்ற மாதிரி) துலிப் தோட்டத்தில் ஒரு நடை நடந்து, ஆடிப் பாடி அந்த சிலிர்ப்பை சில்லுன்னு உணர்ந்தால் எப்பூடி இருக்கும். வாங்க போகலாம் .

ஜம்மு காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீ நகரில் இருக்கிறது இந்த துலிப் தோட்டம் . இங்கே கிட்டத்தட்ட 1.5 மில்லியன் செடிகள் இருக்குதாம். ஆத்தாடி என வாயை பிளக்குறீங்களா . அவ்வளவு பெருசுங்க இது.

அது தாங்க இந்திரா காந்தி மெமோரியல் பூங்கா. இது இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப் பெரிய துலிப் தோட்டம் . 30 ஹெக்டர் பரப்பளவு என்றால் பார்த்துக்கொளுங்கள் . அவ்வளவு பெரிசு. என்னங்க நாமளும் அங்கே டூர் போகலாமா ? நீங்களும் அந்த அழகிய பூக்களை பறந்து விரிந்த தோட்டத்தை இந்த வீடியோவில் பார்க்க க்ளிக் பண்ணுங்க.
- Inkpena சஹாயா












Click it and Unblock the Notifications