இந்த பாஜக எம்.எல்.ஏ. தொழுவத்தில் தங்குவதெல்லாம் சரிதான்.. ஆனா படுக்க பாய் போதாதா, மெத்தை எதுக்கு??
பெங்களூரு: கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் மாட்டுத் தொழுவத்தில் தங்குவது அந்த ஊரில் பெரிய செய்தியாகியுள்ளது. எல்லாம் சரிதான். நல்ல விஷயம்தான். ஆனால் மாட்டுத் தொழுவத்தில் மெத்து மெத்தென்ற மெத்தையைப் போடடு அதில் ஏறி பாதுகாப்பாக படுத்து தூங்கும் விஷயம் மட்டும்தான் இடிக்கிறது.
சுரேஷ் குமார், பெங்களூரு ராஜாஜி நகர் சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. ஆவார். கடந்த எதியூரப்பா அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர். நன்றாக பேசக் கூடியவர். அவரது பேச்சைக் கேட்க நல்ல கூட்டமும் கூடும்.
தற்போது கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. அதில் பாஜக சார்பில் ஸ்ரீனிவாஸ் பிரசாத் போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸை விட்டு விட்டு பாஜகவுக்குத் தாவியவர் ஆவார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்துள்ளார் சுரேஷ்குமார். வந்த இடத்தில்தான் மாட்டுத் தொழுவத்தில் டெண்ட் போட்டு, ஸ்டண்ட் அடித்துக் கொண்டுள்ளார்.

"ஸ்டார் ஹோட்டல் பேடா"
நஞ்சன்கூடு பிரசாரத்திற்காக வந்த சுரேஷ் குமாருக்கு கட்சி சார்பில் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க அறை போடப்பட்டிருந்ததாம். ஆனால் அதை வேண்டாம் என்று கூறி விட்டாராம் சுரேஷ் குமார். மாறாக மாட்டுத் தொழுவம் ஒன்றை தனது தங்குமிடமாக தேர்வு செய்தாராம்.

மாட்டுத் தொழுவத்தில் சுரேஷ் குமார்
அங்குள்ள மாட்டுத் தொழுவம் ஒன்றில்தான் அவர் தங்கியுள்ளார். அங்கிருந்துதான் பிரசாரத்திற்குப் போகிறார் வருகிறார். அவரைச் சுற்றி எப்போதும் சிலர் உள்ளனர். அவர்களுடன் ஜாலியாகப் பேசிப் பொழுது போக்குகிறார் சுரேஷ் குமார்.

இதெல்லாம் வரலாறு அமைச்சரே!
இதுகுறித்து சுரேஷ் குமார் கூறுகையில், நான் இப்படி பொது வெளியில் தங்குவது புதிதில்லை. ஏற்கனவே 2013ம் ஆண்டு பெங்களூரிலிருந்து திருப்பதிக்குப் பாத யாத்திரை போனபோதும் இப்படித்தான் தங்கினேன். அதேபோல 2015ல் தர்மசலா பாதயாத்திரையின்போதும் இதேபோலத்தான் தங்கினேன் என்றார் சுரேஷ் குமார்.

செம கூட்டம்
மாட்டுத் தொழுவத்தில் தங்கியிருக்கும் சுரேஷ் குமாரை வேடிக்கை பார்க்கவும், அவருடன் பேசவும் நல்ல கூட்டம் கூடுகிறது. ஆதரவாளர்கள் புடை சூழ இருக்கும் சுரேஷ் குமார் மாட்டுத் தொழுவத்தில் தங்கியபடி பேப்பர் படிக்கிறார். அரசியல் பேசுகிறார். ஏப்ரல் 9ம் தேதி நஞ்சன்கூடு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மெத்தை எதுக்கு!
சொகுசு, ஆடம்பரம் வேண்டாம் என்று கூறும் சுரேஷ் குமார் மாட்டுத் தொழுவத்தில் தங்குவது பாராட்டுக்குரியதுதான். நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் சாதாரணமாக பாய் விரித்துப் படுக்காமல் மெத்து மெத்தென்று மெத்தையைப் போட்டு படுத்திருப்பது மட்டும்தான் லேசாக இடிக்கிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications