வாரிசு அரசியலுக்கு இடமில்லை என நிரூபித்த தேர்தல் முடிவு.. அமித்ஷா புகழாரம்
டெல்லி: வாரிசு அரசியலுக்கு இனி இந்திய அரசியலில் இடமில்லை என்பதை பாஜக பெற்ற வெற்றி புடம் போட்டு காட்டிவிட்டதாக அக்கட்சி தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றியை சுவைத்த தகவல் வெளியானதும், பிற்பகல் 3.45 மணியளவில் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் அமித்ஷா. அவர் கூறுகையில், ஐந்து மாநில வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சுந்திர இந்தியா வரலாற்றிலேயே மிகப்பெரிய தேர்தல் வெற்றியை உத்தர பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

இந்த தேர்தல் வெற்றி பிரதமர் மோடியை சேரும். நாட்டின் அரசியல் பயணம் இனிமேல் மாறும். வாரிசு அரசியல், ஜாதி அரசியல் ஒழியும். வளர்ச்சி சார்ந்த அரசியலுக்குத்தான் நாட்டில் இடமுள்ளது என்பதை தேர்தல் வெற்றி காட்டிவிட்டது. இந்த வெற்றிகள் பாஜகவுக்கு ஊக்கம் கொடுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பிரிந்தது உத்தரகாண்ட். இரு மாநிலங்களும் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு கட்சி பெற்ற பெரிய வெற்றி பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications