கார்பைடு வைத்து பழங்களை பழுக்க வைப்பவர்கள் “தீவிரவாதிகள்”- ஆந்திரா ஹைகோர்ட் அதிரடி!
ஹைதராபாத்: இயற்கையான காய்களைப் பழுக்க வைக்க கார்பைடு ரசாயனப் பொருளைப் பயன்படுத்துவது தீவிரவாதத்தினை விடக் கொடுமையானது என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காய்களை பழுக்க வைக்க கார்பைடு என்ற ரசாயன பொருள் பயன்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம் நேற்று அளித்த உத்தரவில், "காய்களை உடனடியாக பழுக்க வைக்க "கார்பைடு" என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பழங்களை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

ரசாயன பொருள் மூலம் காய்களை பழுக்க வைக்கும் முறை தீவிரவாத செயலை விட மிகவும் பயங்கரமானது. இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் கார்பைடு பயன்படுத்தி காய்களை பழுக்க வைக்கும் முறைக்கு தடை விதிக்கப்படுகிறது.
கார்பைடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது வியாபாரிகளுக்கு எப்படி கிடைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் பழக்கடைகளில் அதிகாரிகள் சோதனையிட வேண்டும்.
கார்பைடு பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க இரு மாநில அரசுகளும் எடுக்கும் நடவடிக்கை குறித்து உடனடியாக கோர்ட்டுக்கு தெரியபடுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications