மோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்!
கொச்சி: குருவாயூருக்கு வந்த பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு கடிதம் வந்துள்ளது. பிரதர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வந்த அந்த கடிதத்தை தொடர்ந்து, உளவுப்பிரிவினர், பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
கடந்த 8-ம்தேதி குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அதற்கு முன்தினம் 7 ம் தேதி இரவு 7 மணிக்கு கோயிலுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதம் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் மாறி, மாறி எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதம் எங்கிருந்து வந்தது என்பது போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் ரூ.5 தபால்தலை ஒட்டப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பிரதமரின் கோயில் வருகைக்கு முன்தினம் வந்த அந்த மிரட்டல் கடிதத்தில் முகவரி எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. கடிதத்தை பார்த்த கோயில் நிர்வாகிகள் பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிரதமரின் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் உடனடியாக சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினருக்கும போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் எந்தவிதமான குளறுபடிகளும் ஏற்படாதவகையில், பாதுகாப்பு விதிமுறையின்படியே செய்யப்படும். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பாதுகாப்புக்கு என நியமிக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு அதிகாரி மேற்பார்வை மூலம் நடைபெறும்.
இதுபோன்ற மிரட்டல் கடிதங்கள் வந்தால் அந்த செய்திகளை பாதுகாப்பு பிரிவின் பல்வேறு பிரிவுகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுபார்கள். குறிப்பாக எஸ்பிஜி பிரிவுக்கு உளவுத்துறை, மாநில போலீஸார், ராணுவம் ஆகியவற்றுடன் எப்போதும் தொடர்பிலும் இருப்பார்கள்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications