குவாரண்டைனில் இருந்த மூன்று குழந்தைகள் அடுத்தது உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் சோகம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று சிறுமிகள் இறந்தனர், உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு குழந்தைகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த மூன்றாவது குழந்தை நான்கு மாத குழந்தையாகும்.வியாழக்கிழமை இறந்தது. அந்த குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். முன்னதாக புதன்கிழமை 18 மாத குழந்தை மற்றும் மூன்று மாத குழந்தை ஆகியவை "கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு" காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த முன்று குழந்தைகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு மாநிலத்திற்கு திரும்பியவர் ஆவர்.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வெப்பம் மற்றும் கூட்டம் அதிகமாக இருந்ததே இந்த மரணங்களுக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறினர். மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோ, மையங்களில் ஏதேனும் "குறைபாடுகள்" காணப்பட்டால் "கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என்றார். அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு அதிக சுமைகளை தாங்க வேண்டிய உள்ளது என்றார்.
மே 14 முதல் தற்போது வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் மின்சாரம் தாக்கியும் , இரண்டு பேர் பாம்புக் கடித்தும், 2 பேர் தற்கொலை செய்தும், மூன்று பேர் நோயாலும் இறந்துள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications