புரி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து தீ விபத்து
புரி: புரி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேற்று மாலை திடீரென அடுத்தடுத்து நிகழந்த தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம் புரி ரயில் நிலையத்தில் நந்தன்கன்னன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் 4-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் புரி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்கு தயாராக இருந்தது. அப்போது நின்று கொண்டிருந்த ரயிலின் 11 மற்றும் 12-வது பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது சிறிது நேரத்தில் 2 வது பிளாட்பாரத்தில் இருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பரவியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனிடையே புரி-ஹவுரா எ்க்ஸ்பிரஸ் ரயிலிலும் தீ பரவியது. ரயில் நிலையம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது.
இதனால் அங்கு இருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரயிலில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications