அன்று ஜெயில் கைதி…இன்று தாஜ்மஹால் நிறுவன மேலாளர் – திஹார் ஜெயிலின் நன்கொடை இது!
டெல்லி: உங்களுக்கு ராஜூ பிரசாந்த்தை தெரியுமா? முன்பு தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது அவர் தாஜ்மஹால் நிறுவனங்களின் துணை வர்த்தக மேலாளர்.
முன்போ, கொலைக்காக திஹார் ஜெயிலில் தண்டனை அனுபவித்த குற்றவாளி.ஆச்சரியமாக இருக்கின்றதா? மேலும் கேளுங்கள்.
திஹாரில் குற்றவாளி:
திஹார் ஜெயிலில் கிட்டத்தட்ட 8 வருடங்கள் தண்டனை அனுபவித்தவர் ராஜூ பிரசாந்த்.அவர்தான் தற்போது 35,000 ரூபாய் சம்பளத்தில் தாஜ்மஹால் நிறுவனத்தில் மேலாளர் ஆகி உள்ளார்.
சமூக சேவை படிப்பு:
இந்த மிக அதிகமான சம்பளத்தைப் பெற்றுள்ள ராஜூ, ஜெயிலில் இருக்கும்போதே சமூக சேவைக்கான இளநிலைப் படிப்பை முடித்துள்ளார்.
நன்நடத்தையால் விடுதலை:
"நான் கொலைக்குற்றவாளியாக இங்கு வந்தபோது எனக்கு வயது 18.என்னுடைய நன்நடத்தையால் தண்டனையானது குறைக்கப்பட்டது.ஜெயிலிலேயே படிப்பை முடித்த நான் இன்று ஒரு வேலையையும் பெற்றுள்ளேன்.நான் கண்டிப்பாக என்னுடைய ஊழியர்களுக்கு நல்லதையே செய்வேன்" என்று கூறியுள்ளார் பிரசாந்த்.
வேலைவாய்ப்பு முகாம்:
கிட்டதட்ட 66 ஜெயில் கைதிகள் கடந்த வாரம் விடுதலையாகினர்.அதற்கு முன்பாக அவர்களுக்காக ஜெயில் நிர்வாகம் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
தனியார் நிறுவனங்கள்:
வெண்டேட்டா மற்றும் ஐடிஈஐஎம் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளையும், தாஜ்மஹால் நிறுவனம் அதிக அளவிலான சம்பளமுள்ள வேலைவாய்ப்பையும் அளித்தன.
விரைவில் வேலை:
இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற கைதிகள் அனைவரும் விரைவில் வேலையில் அமர்வார்கள் என்று திஹார் ஜெயிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் கைதிகள் இல்லை:
31 நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன.மேலும், தேர்வானது நன்நடத்தை மற்றும் படிப்பின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது.ஆனால், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெண் கைதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்:
திஹார் ஜெயிலின் உயர் அதிகாரி விமலா மெக்ரா வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.மேலும், ஜெயிலில் உள்ள குறைபாடுகளைப் பற்றிக் கேட்டறிந்தார்.
-
IT JOBS: அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல்-லில் மார்ச் 20ல் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications