அன்று ஜெயில் கைதி…இன்று தாஜ்மஹால் நிறுவன மேலாளர் – திஹார் ஜெயிலின் நன்கொடை இது!
டெல்லி: உங்களுக்கு ராஜூ பிரசாந்த்தை தெரியுமா? முன்பு தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது அவர் தாஜ்மஹால் நிறுவனங்களின் துணை வர்த்தக மேலாளர்.
முன்போ, கொலைக்காக திஹார் ஜெயிலில் தண்டனை அனுபவித்த குற்றவாளி.ஆச்சரியமாக இருக்கின்றதா? மேலும் கேளுங்கள்.
திஹாரில் குற்றவாளி:
திஹார் ஜெயிலில் கிட்டத்தட்ட 8 வருடங்கள் தண்டனை அனுபவித்தவர் ராஜூ பிரசாந்த்.அவர்தான் தற்போது 35,000 ரூபாய் சம்பளத்தில் தாஜ்மஹால் நிறுவனத்தில் மேலாளர் ஆகி உள்ளார்.
சமூக சேவை படிப்பு:
இந்த மிக அதிகமான சம்பளத்தைப் பெற்றுள்ள ராஜூ, ஜெயிலில் இருக்கும்போதே சமூக சேவைக்கான இளநிலைப் படிப்பை முடித்துள்ளார்.
நன்நடத்தையால் விடுதலை:
"நான் கொலைக்குற்றவாளியாக இங்கு வந்தபோது எனக்கு வயது 18.என்னுடைய நன்நடத்தையால் தண்டனையானது குறைக்கப்பட்டது.ஜெயிலிலேயே படிப்பை முடித்த நான் இன்று ஒரு வேலையையும் பெற்றுள்ளேன்.நான் கண்டிப்பாக என்னுடைய ஊழியர்களுக்கு நல்லதையே செய்வேன்" என்று கூறியுள்ளார் பிரசாந்த்.
வேலைவாய்ப்பு முகாம்:
கிட்டதட்ட 66 ஜெயில் கைதிகள் கடந்த வாரம் விடுதலையாகினர்.அதற்கு முன்பாக அவர்களுக்காக ஜெயில் நிர்வாகம் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
தனியார் நிறுவனங்கள்:
வெண்டேட்டா மற்றும் ஐடிஈஐஎம் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளையும், தாஜ்மஹால் நிறுவனம் அதிக அளவிலான சம்பளமுள்ள வேலைவாய்ப்பையும் அளித்தன.
விரைவில் வேலை:
இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற கைதிகள் அனைவரும் விரைவில் வேலையில் அமர்வார்கள் என்று திஹார் ஜெயிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் கைதிகள் இல்லை:
31 நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன.மேலும், தேர்வானது நன்நடத்தை மற்றும் படிப்பின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது.ஆனால், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பெண் கைதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்:
திஹார் ஜெயிலின் உயர் அதிகாரி விமலா மெக்ரா வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.மேலும், ஜெயிலில் உள்ள குறைபாடுகளைப் பற்றிக் கேட்டறிந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications