ஏழுமலையானை இலவச க்யூவிலேயே 30 நிமிடத்தில் தரிசிக்கலாம் – கூட்டம் குறைந்ததால்!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் 30 நிமிடங்களிலேயே சுவாமி தரிசனம் செய்ய முடிகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று காலை முதல் இலவச தரிசனத்துக்கு 2 மணி நேரமானது. நடைபாதை பக்தர்கள் மற்றும் ரூபாய் 300 கட்டணத்தில் 1 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு 8.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்தனர். அறைகளில் யாரும் காத்திருக்கவில்லை. நேற்று ரூபாய் 1 கோடியே 80 லட்சம் உண்டியல் பணம் வசூலானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications